Tuesday, May 26, 2009

காதலியின் சிரிப்பிற்காக !!!


மலரின் நிறமோ,
மலரின் மனமோ,
வேர்கள் அறியாது !!
இருந்தபோதும்
வேர்கள் இன்றி
மலர்கள் கிடையாது !!
நீ வளர்ந்து நிற்க
வானம் பார்க்க
மண்ணில் புதைகின்றேன்
காதலி
உன் சிரிப்பிற்காக
என் காதல் அழிக்கின்றேன் !!!

Friday, May 22, 2009

கண்களின் காரணம்





என் பார்வைக்காக மட்டுமே கிடைக்க பெற்றது என் கண்கள் என்று இருந்தேன்...


உன்னை பார்த்த பின்பே என் கண்களின் காரணம் அறிந்தேன்..!!!



இசை பாடா இதயம்



இமையாகவே நீ இருபதனால் கனவுகள் நீயே !!


நிழலாக நீ இருப்பதனால், நினைவுகளும் நீயே !!


கதிராக நீ இருப்பதனால் விடியலேல்லாம் நீயே !!


நிலவொளியாக நீ இருப்பதனால் இரவுகளும் நீயே !!


உணவாக நீ இருப்பதனால் ருசிபத்தெல்லாம் நீயே !!


உறவாக நீ இருப்பதனால் என் உரிமைகளும் நீயே !!


உடலாக நீ இருப்பதனால் உணர்வதெல்லாம் நீயே !!


உயிராக நீ இருப்பதனால் என் உதிரத்திலும் நீயே !!


எதுவாக நீ இருந்தபோதும் நீ எனதாகவில்லை


நீ இருந்தாடிய இதயம் இன்று இசை பாடவில்லை !!!