இன்று கவலை இல்லை,
வானம் நமது எல்லை,
குழந்தை உள்ளம் போலே நாம் ஆடலாம் !!
நேற்று முடிந்த தொல்லை,
நாளை பிறக்க வில்லை,
இந்த நாளை மட்டும் கொண்டாடலாம் !!
வாடா வா வாழ்க்கை அழைக்கிறது
வாழ வா
வகுப்புகள் இங்கு தேவைஇல்லை
விளையாடவா!!!
சிறகுகள் விரிக்கலாம்
காற்றினில் பறக்கலாம்!!!
நண்பா நாமெல்லாம், கேன்வாஸ் போலே
வர்ணங்கள் அதிகம் நீ தீட்டு
சுற்றிபார் பூமி உனதே
இன்ப இசை மீட்டு
ஏன் என்ற கேள்வி
உன்னுள் பிறக்க
அதுவே உந்தன் சாவி
உன் விதி
நீ கண்ட கனவு
உண்மையென
உண்மையென
ஊர் சொல்ல
உண்மையாக்க
வா வாழலாம் !!!

No comments:
Post a Comment